கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று ஆனதும் அத்திவரதர் புகழ்பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆண்டுதோறும் மூன்று கருட சேவை நிகழ்வுகள் நடைபெறும்.
வைகாசி பிரமோற்சவம் மூன்றாம் நாள் , ஆனி மாதம் மற்றும் ஆடி மாதம் என மூன்று கருட சேவை நிகழ்வுகள் நடைபெறும் நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அவ்வகையில் இன்று ஆனி கருட சேவை நிகழ்வு மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. முன்னதாக மலை மேல் இருந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள் இறங்கி வந்து சிறப்பு திருமஞ்சனம் கண்டு அதனை தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் அலங்காரம் மண்டபத்தில் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு புறப்பாடு கண்டது.
சிறப்பு தீப ஆராதனை என்பது கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கங்கள் எழுப்ப வரதராஜரை பாதம் தாங்கிகள் சிறப்பு குலுக்களுடன் பக்தர்கள் சேவை கண்டனர்.
இதனைத் தொடர்ந்து எம்பெருமான் கோபுர தரிசனம் மற்றும் மாட வீதிகளில் புறப்பாடு கண்டபோது ஏராளமான பக்தர்கள் தீபாராதனை செய்து எம்பெருமானை வழிபட்டனர்.




