வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரு கே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில் கீழ்ப்பகுதியில் 36 அடி உயர குகை வடிவிலான 18 சித்தர்களுடன் தியான மண்டப அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடி மாத இரண்டாவதுவார வெள்ளி முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த ஏற்பாடுகளை கோயில் நிர்வாக டிரஸ்ட்டி கோபிநாத் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதே போல மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயம், மதுரை யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயம், மதுரை வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயம், வைகை காலனி கிழக்கு சக்தி மாரியம்மன் ஆலயம் ஆகிய கோயில்களில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.




