Close
செப்டம்பர் 20, 2024 1:41 காலை

புதுக்கோட்டை சாந்தநாதர்- வேதநாயகி அம்பாள் திருக்கல்யாணம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சாந்தநாதர் கோயிலில் நடைபெற்ற சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள  வேதநாயகி அம்மன் உடனுறை சாந்தநாத சுவாமி கோவிலில்  சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்  நடைபெற்றது.
புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள  வேதநாயகி அம்மன் உடனுறை சாந்தநாத சுவாமி கோவிலில்  சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் 28.05.2022  இரவு 8.15  மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி காலையில் வேதநாயகி அம்மன் உடனுறை சாந்தநாத சுவாமிக்கு மஞ்சள், சந்தனம்,  பால், தயிர் பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு வெள்ளிக் காப்பு சாற்றப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருக்கல்யாணம் தொடர்ந்து மாலையில் புதுக்கோட்டை கீழ 3 -ஆம் வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து வரதராஜ பெருமாளுடன் பக்தர்கள் தேங்காய், பழங்கள், பூக்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட சீர்வரிசைகளை மேள தாளத்துடன் ஊர்வலமாக சாந்தநாதசுவாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் வரதராஜ பெருமாள் தாரை வார்த்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வேதநாயகி அம்மன் உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கல்யாணம் அரிமளம் ரவிக்குழுக்கள் முன்னிலையில்  விமரிசையாக  நடைபெற்றது.

புதுக்கோட்டை

இதில்,  நகர்மன்றத்தலைவர் திலகவதிசெந்தில் பிரதோஷ குழு மல்லிகாவெங்கட்ராமன் மற்றும் இறைவழிபாடு அமைப்பினர்    உள்ளிட்ட  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள்,  இறைவழிபாடு அமைப்பினர்   விழாக் குழுவினர் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்கள் திரளானோர்  வருகை தந்து வழி பட்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top