Close
செப்டம்பர் 20, 2024 1:31 காலை

புதுக்கோட்டை மேல 2ம் வீதி நைனார் குளம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மேல 2 ம் வீதி நைனார் குளம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது

புதுக்கோட்டை மேல 2 -ஆம் வீதி நைனார் குளம்  ஸ்ரீ  செல்வ விநாயகர் கோவில் மஹா  கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மேல 2 -ஆம் வீதி நைனார் குளம்  ஸ்ரீ  செல்வ விநாயகர் கோவில் மஹா  கும்பாபிஷேகம் சிறப்புடன் நடந்தது             செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி  முதல் நாளில்  காலை, மாலை யாக சாலை பூஜைகள் நடந்தன.  அனுக்ஞை, கணபதி பூஜை, நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமத்துடன்  வாஸ்து சாந்தியுடன் துவங்கியது.

கும்பாபிஷேகத்தன்று   காலை      யாக பூஜை, கோபூஜை, மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது   பின்னர்  சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்தில் ஊற்றினர். செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்து  தொடர்ந்து  அனைத்து பரிவார தெய்வங்கள் தெட்சிணாமூர்ததி ஸ்ரீ துர்க்கையம்மன் நாகர் அபிஷேகம் நடத்தப்பட்டது .அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

மூத்த மருத்துவர் ராம்தாஸ் மற்றும்  மணிக்குருக்கள், ரவிக்குருக்கள் ஸ்ரீ  செல்வ விநாயகர் கோவில்   கும்பாபிஷேக விழாக்குழுவினர் கமிட்டியாளர்கள் நிர்வாகிகள் ஜானகிராமன் நிலா மணியன், சிங்காரம் ,கண்ணதாசன், வீரசேகர், சங்கர் விவேகானந்தன்,  ஆன்மிக நெறியாளர் ஆனந்தன்,   குமரிஆனந்தன் மற்றும் அனைத்து சமுதாய பிரமுகர்கள்,  பக்தர்கள்  கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதங்கள்  வழங்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top