Close
செப்டம்பர் 20, 2024 3:59 காலை

புதுக்கோட்டை  தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆனி  மாத சஷ்டி  சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோயிலில் நடைபெற்ற சஷ்டி வழிபாடு

புதுக்கோட்டை  தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆனி மாத சஷ்டி  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.     இதையொட்டி தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.

புதுக்கோட்டைதெற்கு 4 -ஆம் வீதி மேல ராஜ  தி சந்திப்பிலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் ஆனி  மாத சஷ்டியை  முன்னிட் டு  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காலையில் தண்டாயுத பாணி சுவாமிக்கும், விநாயகருக்கும் பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது. மாலையில் தண்டாயுதபாணி சுவாமி சந்தனக் காப்பு  மலர் அலங்காரத்திலும், விநாயகர் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு  அருள் பாலித்தார்.

இதில் திரளான  பக்தர்கள் வந்திருந்து   வழிபட்டனர். ஏற்பாடுகளை பாலுஅய்யர் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top