Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

புதுக்கோட்டை வாகவாசல் விஜயபுரம் பழனி ஆண்டவர் கோயிலுக்கு மூலவர் திருமேனி எடுத்துச் செல்லும் வைபவம்- சிறப்பு பூஜை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வாகவாசல் விஜயபுரம் பழனி ஆண்டவர் கோயில் மூலவர் திருமேனிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை

புதுக்கோட்டை   விஜயபுரம்  அருள்மிகு பழனி ஆண்டவர்  திருக்கோவிலுக்கு  பழனி ஆண்டவர் மூலவர்  திருமேனி எடுத்துச் செல்லும்   வைபவம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகிலுள்ள வாகவாசல், விஜயபுரம் கிராமத்தில் 300 வருட வரலாறு கொண்ட கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில் திருப்பணி முழுவீச்சில்  நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக  திருமயம் சாலையுள்ள  புலிவலம்     ஆர். எம். ஆர். சிற்பகலைக்கூடத்திலிருந்து   விஜயபுரம்   அருள் மிகு பழனி ஆண்டவர் திருக்கோவிலுக்கு  பழனி ஆண்டவர்  சிலை திருமேனி  எடுத்துச்செல்லும்  விழா 6.7.2022 புதன்கிழமை  நடைபெற்றது .

வருகின்ற  ஆவணி  5  -ஆம் தேதி  (21.8.2022)  ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில் கும்பாபிஷேகம் ,அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசிய கட்சி பிரமுகர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் , மத்திய, மாநில அரசு அலுவலர்கள் , ஊர் பொதுமக்கள்  அனைவரின் பங்கேற்பில் சிறப்பாக நடைபெற உள்ளதாக விழாக்குழுத் தலைவர் தங்கராசு தெரிவித்தார்

ஏற்பாடுகளை, அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில் ஆன்மீகம் சமுகசேவை அறக்கட்டளையின் சார்ந்த தலைவர் நிர்வாகிகள் பக்தர்கள்  செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top