Close
செப்டம்பர் 19, 2024 11:09 மணி

புதுக்கோட்டை நகர் தண்டாயுதபாணி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா

புதுக்கோட்டை

ஆடிக்கிருத்திகையையொட்டி புதுகை தண்டாயுதபாணி சுவாமிக்கு நடந்த சிறப்பு அபிஷேகங்கள்

ஆடிக்கிருத்திகை என்பது ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் முக்கிய பண்டிகையாகும். இந்தப் பண்டிகை தினத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அதன்படி புதுக்கோட்டை மேல ராஜவீதி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில்  சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top