Close
செப்டம்பர் 20, 2024 1:40 காலை

புதுக்கோட்டை தண்டாயுதபாணி  கோயிலில் ஆடிப்பெருக்கு  சஷ்டி  வழிபாடு

புதுக்கோட்டை

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் புதுகை மேலராஜவீதி தண்டாயுதபாணி சுவாமி

புதுக்கோட்டை மேல ராஜ  வீதியிலுள்ள அருள்மிகு  தண்டாயுதபாணி  சுவாமி திருக் கோயிலில் ஆடிபெருக்கு  சஷ்டியை   முன்னிட்டு  சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கும், விநாயகருக்கும் பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம்  மற்றும்   தீபாராதனை  நடந்தது.

மாலையில்  தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு  மலர் அலங்காரத்திலும், விநாயகர் வெள்ளிக் கவச அலங்காரத் திலும் பக்தர்களுக்கு  அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பாலுஅய்யர் மற்றும் கோயில் ஊழியர்கள்  செய்திருந்தனர் .அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top