Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

விளையாட்டு போட்டிகளில் சாதித்த வடகாடு அரசுப் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி மற்றும் ஆசிரியர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நிகழ் கல்வி ஆண்டில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் ஆகிய போட்டிகளில் மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

இதேபோன்று, 400 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் இடம், குண்டெறிதலில் முதலிடம், 1,500 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் மாணவர்கள் 2-ம் இடம் பெற்றனர்.

இதன்பிறகு, மாவட்ட அளவில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம், 19 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 3-வது இடமும்,

17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2-வது இடம், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 3-வது இடம், கடற்கரை கைபந்து போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம், 17 -வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2-வது இடம் பிடித்து மாணவர்கள் சாதித்துள்ளனர்.

மேலும், 19 வயதுக்கு உட்பட்ட வாலிபால் போட்டியில் மாணவிகள் 3-வது இடம் பெற்றனர். மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள்
கைப்பந்து போட்டியிலும்,17 வயது வயதுக்கு உட்பட்ட மாணவிகள் கடற்கரை கைப்பந்து போட்டியிலும்,100 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் போட்டியில் மாணவி காவியாவும் கலந்து கொள்ள உள்ளார்கள்.

அடுத்தடுத்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுபள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவ, மாணவிகளையும் அவர்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி பாராட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top