ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)யில் பாரதியார் பல்கலைக்கழக அளவிலான மகளிர் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன.
பாரதியார் பல்கலைக்கழக அளவில் மகளிருக்கான குத்துச் சண்டை போட்டி ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி உடற்கல்வி துறையின் சார்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் 12 எடை பிரிவில், பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு உட்பட்ட 17 கல்லூரி அணிகள் பங்குபெற்றன. போட்டியை வேளாளர் மகளிர் கல்லூரியின் தலைவர் எஸ்.எஸ். கந்தசாமி, செயலர் எஸ்.டி. சந்திரசேகர் மற்றும் முதல்வர் எஸ்.கே.ஜெயந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
வெவ்வேறு எடை பிரிவில் நடைபெற்ற போட்டியின் இறுதியில் கோவை நிர்மலா கல்லூரி அணி முதலிடத்தையும், பாரதியார் பல்கலைக்கழக அணி இரண்டாமிடத்தையும், வேளாளர் மகளிர் கல்லூரி அணி மூன்றாமிடத்தையும் வென்றது.
வெற்றி பெற்ற அணியினருக்கு பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி துறை இயக்குநர் (பொறுப்பு)ராஜேஸ்வரன் மற்றும் வேளாளர் மகளிர் கல்லூரி, உணவு மற்றும் ஊட்டச்சத்து துறைத் தலைவர்சபிதா ஆகியோர் பரிசு கோப்பைகளை வழங்கி வாழ்த்தினர்.




