Close
செப்டம்பர் 20, 2024 1:34 காலை

ஈரோட்டில் 50 வயதினருக்கான மாநில அளவிலான பூப்பந்து போட்டி

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்து போட்டி

ஈரோடு டைகர்ஸ் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூப்பந்து போட்டி ஈரோட்டில் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில்  நடைபெற்றது.

இந்த போட்டியில் ஈரோடு, நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் பங்கேற்றன. இதில் குமாரபாளையம் கே.பி.பி.சி. அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. கொடுமுடி ஸ்போட்ஸ் கிளப் 2-ஆவது இடத்தையும், கோவை ஜி.வி. கிளப் 3-ஆவது இடத்தையும், ஈரோடு டைகர்ஸ் பூப்பந்தாட்ட கழகம் 4-ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இதையடுத்து  நடைபெற்ற  பரிசளிக்கும்  விழாவில் தொழில் அதிபர் பாலசுப்பிரமணியம், ஆடிட்டர் எஸ்.சித்தேஸ்வரன், டைகர் பூப்பந்தாட்ட கழக தலைவர் எம்.ஜெகன்மோகன், சத்தியசீலன் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

இதில் முதலிடம் வென்ற  வீரர்களுக்கு ஈரோடு சுதா மருத்துவமனை சார்பில் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.  2-வது இடம் பிடித்தஅணிக்கு ரூ.7 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.5 ஆயிரமும், 4-வது  இடம் பிடித்த அணிக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கப்பட்டது. விழாவில் டைகர்ஸ் பூப்பந்தாட்ட கழக செயலாளர் அப்துல் சாதிக், பொருளாளர் முரளிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top