Close
செப்டம்பர் 20, 2024 3:47 காலை

கோடை கால தற்காப்புக்கலை பயிற்சி முகாம் நிறைவு

புதுக்கோட்டை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட கோடை கால தற்காப்பு கலை பயிற்சி

புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோடைகால சிறப்பு பயிற்சியான சிலம்பம் களரி தற்காப்பு கலை  பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோடைகால சிறப்பு பயிற்சியான சிலம்பம், களரி, தற்காப்பு கலைகள் என 50 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தக் கோடை கால பயிற்சி ஆனது கடந்த 14 -ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து ஏழு நாட்கள்  அளிக்கப்பட்ட பயிற்சி  இன்று நிறைவடைந்தது.

இதையடுத்து பயிற்சி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.  முன்னதாக பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் இதனைப் பெற்றோர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்து கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் ஜெயா கணேசன், நகரச் செயலாளர் ஜெகன், மருந்தாளுனர் சங்க மாநில தலைவர் கார்த்திக், சிலம்பம் பாசறை பாண்டியன், மக்கள் ஒற்றுமை மேடை ரகுமான், கணேஷ் நகர் உதவி ஆய்வாளர் சாகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top