Close
செப்டம்பர் 20, 2024 4:01 காலை

அரசு அலுவலர்களுக்கான பிரிவில் மன்னர் கல்லூரி பேராசிரியருக்கு முதல் பரிசு: அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை

.அரசு அலுவலர்களுக்கான பிரிவில் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிப்பேராசிரியர் முனைவர் கணேசன் முதற்.பரிசு பெற்றார்.

புதுக்கோட்டை கற்பகவிநாயகா திருமண மண்டபத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற  விழாவில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் , மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகளை வழங்கினார்கள்

இதில் .அரசு அலுவலர்களுக்கான   பிரிவில்  புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிப்பேராசிரியர்   முனைவர்   கணேசன் முதல் பரிசு பெற்றார்.   வல்லத்திராக்கோட்டை  காவல் நிலையத்தில் பணி  புரியும் ஷேக்  தாவூத்  இரண்டாம்  பரிசு  பெற்றனர் .

நிகிழ்வில்  சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top