Close
செப்டம்பர் 20, 2024 3:46 காலை

பெருந்துறை அருகே குள்ளம்பாளையத்தில் விளையாட்டு மைதானம்… எம்எல்ஏ ஜெயக்குமார் திறப்பு

ஈரோடு

பெருந்துறை அருகே குள்ளம்பாளையம் பஞ்சாயத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தை எம்எல்ஏ ஜெயக்குமார் திறந்து வைத்தார் அருகில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் உள்ளார்

பெருந்துறை அருகே குள்ளம்பாளையத்தில் விளையாட்டு மைதானத்தை  எம்எல்ஏ ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் குள்ளம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குள்ளம்பாளையம் பகுதியில் ஊராட்சி பொது நிதி ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. மைதானத்தை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த மருத்துவ முகாமை பார்வை யிட்டார்.  நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள் ஜோதி செல்வராஜ், யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன், துணைத் தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top