Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கங்கள் வென்ற புதுக்கோட்டை எஸ்பி நிஷாபார்த்திபன்

சென்னை

காவல்துறை அதிகாரிகளுக்கு இடையேயான துப்பாக்கிசுடும் போட்டியில் பதக்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன்

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடும் இறுதிப் போட்டி சென்னை மருதம் வளாகத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் (11.3.2022) நடைபெற்றது.

ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதிச் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்ற 36 ஐபிஎஸ் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

பிஸ்டல் பிரிவில் வெற்றி பெற்றவர்கள்:

1. ஸ்ரீஅபிநவ், காவல் கண்காணிப்பாளர், சேலம் மாவட்டம்.

2. முனைவர் செ.சைலேந்திரபாபு, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் ஆர்.திருநாவுக்கரசு, காவல் கண்காணிப் பாளர், முதலமைச்சரின் உள்வட்ட பாதுகாப்பு பிரிவு.

3. மருத்துவர் கே.கார்த்திகேயன், காவல் துணை ஆணையர், கீழ்ப்பாக்கம், நிஷா பார்த்திபன், காவல் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை மாவட்டம்.  பிரவேஸ் குமார், காவல் துணைத் தலைவர், திருநெல்வேலி சரகம் மற்றும் இ.சாய் சரண் தேஜஸ்வி, காவல் கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி.

இன்சாஸ் பிரிவில்:

1. மருத்துவர் கே.கார்த்திகேயன்¸ காவல் துணை ஆணையர், கீழ்ப்பாக்கம்.

2. நிஷாபார்த்திபன், காவல் கண்காணிப்பாளர்,        புதுக்கோட்டை.

3. முனைவர் செ.சைலேந்திரபாபு, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் ஆர்.திருநாவுக்கரசு, காவல் கண்காணிப்பாளர், முதலமைச்சரின் உள்வட்ட பாதுகாப்பு பிரிவு.

ஒட்டுமொத்த சிறந்தவர்கள் பிரிவில்:

1. மருத்துவர் கே.கார்த்திகேயன்¸ காவல் துணை ஆணையர், கீழ்ப்பாக்கம்.

2. நிஷாபார்த்திபன், காவல் கண்காணிப்பாளர்,               புதுக்கோட்டை.

3. முனைவர் செ.சைலேந்திரபாபு, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் ஆர்.திருநாவுக்கரசு, காவல் கண்காணிப்பாளர், முதலமைச்சரின் உள்வட்ட பாதுகாப்பு பிரிவு.

வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளுக்கு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.

இப்போட்டியில் கூடுதல் காவல் இயக்குனர்கள் மகேஷ்குமார் அகர்வால் (குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கப்பிரிவு), பி. அமல்ராஜ் (செயலாக்கம்)¸ ஆர்.சுதாகர் காவல்துறை தலைவர் மேற்கு மண்டலம் மற்றும் காவல் அதிகாரிகள் பதக்கங்கள் பெற்றனர். பரிசு வென்ற  10 பேரி்ல் ஒரே பெண் அதிகாரி புதுக்கோட்டை காவல்கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன்  மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top