Close
செப்டம்பர் 20, 2024 4:12 காலை

மாநில செஸ்போட்டியில் வென்ற புதுகை நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் ரகுபதி பாராட்டு

புதுக்கோட்டை

மாநில செஸ் போட்டியில் வென்ற புதுகை நகராட்சிப்பள்ளி மாணவர்களுக்கு நற்சான்றளித்து பாராட்டிய அமைச்சர் ரகுபதி.

மாவட்ட, சோழமண்டல மற்றும் மாநில அளவிலான செஸ் விளையாட்டு போட்டியில் புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

இப்பள்ளியின் 8  -ஆம் வகுப்பு மாணவி செ.அம்சவள்ளி , 4 -ஆம் வகுப்பு மாணவர் செ.குருமூர்த்தி ஆகியோர்  மாவட்ட, சோழமண்டல மற்றும் மாநில அளவிலான செஸ் விளையாட்டு போட்டியில்வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த மாணவர்களை பாராட்டி  தமிழக சட்டத்துறை அமைச்சர்  ரகுபதி, நற்சான்று வழங்கினார்.

இதில், மாவட்ட ஆட்சியர்கவிதா ராமு,சட்ட மன்ற உறுப்பினர் முத்துராஜா,நகர் மன்ற தலைவர்  திலகவதி செந்தில் குமார், துணைத் தலைவர் லியாகத்தலி,  முதன்மை கல்வி அலுவலர்  சாமி சத்யமூர்த்தி, தலைமையாசிரியர் விஜயமாணிக்கம்,   நகர் மன்ற உறுப்பினர் பாரதி  மற்றும்  ஆகியோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top