Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

சோழ மண்டல சதுரங்க  போட்டியில் வென்ற புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை

சோழமண்டல செஸ் போட்டியில் பரிசு வென்ற புதுக்கோட்டை அரசுபள்ளி மாணவர்கள்

சோழ மண்டல அளவில் நடந்த சதுரங்கப் போட்டியில் புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் சதுரங்க  போட்டியில் வெற்றி பெற்றனர்.

 நாகப்பட்டினத்தில்  ரோட்டரிசங்கம்- நாகப்பட்டினம் சதுரங்க கழகம்  இணைந்து நடத்திய சோழ மண்டல அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டியில்  இதில் புதுக்கோட்டை யை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் செ.அம்சவள்ளி, செ. குருமூர்த்திகலந்து கொண்டனர் 15 வயதுக்குட்பட்ட வர்களுக்கு பெண்களுக்கான பிரிவில் செ.அம்சவள்ளி 3ஆம் பரிசையும் 11வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவில்செ. குருமூர்த்தி 7 -ஆம் பரிசையும் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நாகை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சுந்தர்ராஜன்பரிசு வழங்கி  பாராட்டினார்.  நிகழ்வில் சதுரங்க கழக   மாநில   செயலாளர் பாலகுணசேகரன்,   ரோட்டரி மாவட்ட  முன்னாள் ஆளுநர்  என் கோவிந்தராஜ், பிரைம் கட்டிடக் கலைகல்லூரி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து திருச்சி,  திருவாரூர், புதுக்கோட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டங்களில்  நடந்த  சோழ மண்டல அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டியில்  இப்பள்ளி மாணவர்கள் செ.அம்சவள்ளி, செ. குருமூர்த்தி  தொடர்  வெற்றிகளை  பெற்று வருகின்றனர்.  மாணவர்களை,  சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் விஜயமாணிக்கம்,  சதுரங்க கழக நிர்வாகிகள்  நடுவர்கள் கல்வியாளர்கள் வாழ்த்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top