Close
செப்டம்பர் 19, 2024 10:59 மணி

குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை

மாநில சப்ஜூனியர் குத்துச்சண்டை போட்டியில் வென்ற வீரர்களுக்கு பரிசளித்து வாழ்த்திய அமைச்சர் மெய்யநாதன்.

புதுக்கோட்டைநகர் மன்றத்தில்  தமிழ் நாடு குத்துச் சண்டை கழகம் நடத்தும் மாநில  அளவிலான ஆடவர், மகளிர் சப் ஜுனியர் குத்துசண்டைபோட்டிகள்  கடந்த 3 நாள்களாக நடைபெற்றது.

குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, நீலகிரி, விருதுநகர் ,சேலம் ,ஈரோடு மதுரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குத்துச்சண்டை வீரர்கள் 450 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் 14 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் இந்த குத்துச்சண்டை போட்டியில் மொத்தம்  28   வகையான எடை பிரிவில் போட்டி நடைபெறுகிறது. இரண்டாம்  நாள் போட்டியில் மகளிர் பல்வேறு பிரிவுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்,

இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த குத்துச்சண்டை வீரர்கள் மே 20 முதல் 26 தேதி வரை பாக்ஸிங் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடத்தப்படும் தேசிய போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

3 நாட்கள் நடைபெற்ற போட்டி  நிறைவு பெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன் வழங்கி பேசுகையில், நரிக்குறவ மாணவ-மாணவிகள் குத்து சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் தொடர்ந்து சாதிக்க வேண்டும். நரிக்குறவர்கள் குறி பார்த்து சுடுவதில் திறமை படைத்தவர்கள் என்பதால் அவர்களது குழந்தைகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.
புதுக்கோட்டை
 மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் தொழிலதிபர் எஸ்விஎஸ் ஜெயகுமாரை வாழ்த்திய அமைச்சர் மெய்யநாதன். உடன் மாநில குத்துச்சண்டை கழகத் தலைவர் பொன் பாஸ்கர்
நிகழ்வில், தமிழ்நாடு குத்துச்சண்டை கழக தலைவர் பொன்.பாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட  குத்துச்சண்டைக் கழகத் தலைவர் தொழிலதிபர் எஸ்விஎஸ். ஜெயக்குமார், செயலாளர் கார்த்திகேயன்,  திமுக எம்பி. எம்.எம். அப்துல்லா,  நிர்வாகிகள் எம்.எம். பாலு, க. நைனா முகமது, தவத்திரு தயானந்தசந்திரசேகரன், மாருதிமோகன்ராஜ்,   சித்திராதேவி அஞ்சலிதேவி  சதாசிவம், நமச்சிவயம், பாண்டியன்    உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top