Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்

புதுக்கோட்டை

திருமயம் அருகே நடந்த மாட்டுவண்டி எல்கை பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில்  29 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

திருமயம் அருகே உள்ள ஊனையூர் பாலமுருகன் கோவில் சந்தன காப்பு திருவிழாவையொட்டி   30-ம் ஆண்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை, தேனி, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டுவண்டிகள் பங்கு பெற்றன.

பெரிய மாடு, சிறிய மாடு என இருபிரிவாக பந்தயம்  நடத்தப்பட்டன. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் பந்தய தொலைவு போய் வர 8 மைல் தொலைவுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் 10 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு வெற்றி இலக்கை நோக்கி பாய்ந்து சென்றன. இதில் முதல் பரிசு மாத்தூர் சேரன் செங்குட்டுவன், 2-ஆம் பரிசு கள்ளந்திரி சிவபிரபு, 3-ஆம் பரிசு கானாடுகாத்தான் சோலை ஆண்டவர், 4-ஆம் பரிசு கானாடுகாத்தான் அருண் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

 இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவு 19 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதன் பந்தய தொலைவு போய் வர 6 மைல் தொலைவுக்கு  நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட மாடுகள் வெற்றி இலக்கை நோக்கி பாய்ந்து சென்றன.

இந்த போட்டியில் முதல் பரிசு வெளிமுத்தி வாகினி, 2-ஆம் பரிசு வெள்ளலூர் நிரஞ்சன், 3-ஆம் பரிசு சூரக்குண்டு அமர்நாத், 4-ஆம் பரிசு அப்பன்திருப்பதி கிட்டு ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

இதையடுத்து, வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டன. பந்தயம் நடைபெற்ற காரைக்குடி- திருச்சி பைபாஸ் சாலையில் இருபுறமும் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top