Close
செப்டம்பர் 20, 2024 3:57 காலை

தேசிய இளம் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற புதுக்கோட்டை மாணவிக்கு ஆட்சியர் வாழ்த்து

புதுக்கோட்டை

ஐந்தாவது தேசிய இளம் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவியை வாழ்த்திய ஆட்சியர் கவிதா ராமு.

ஐந்தாவது தேசிய இளம் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற  புதுக்கோட்டை மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வாழ்த்துத் தெரிவித்தார்.

சென்னை எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தில் 5 முதல் 11 தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பெண்கள் பிரிவில் 57-60 கிலோ எடை பிரிவில் புதுக்கோட்டையைச் சேர்ந்த த.மாலதி, மூன்றாம் இடம் பிடித்து(வெண்கலம்)  பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, பதக்கம் வென்ற மாணவியை பாராட்டி பரிசு வழங்கி வாழ்த்தினார்.

புதுக்கோட்டை
மாவட்ட ஆட்சியருக்கு மரியாதை செய்த மாவட்ட குத்துச்சண்டை கழகத்தலைவர்எஸ்விஎஸ்.ஜெயகுமார்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ். எம். குமரன், மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் எஸ். வி .எஸ். ஜெயக்குமார், மாவட்ட குத்துச்சண்டை கழக செயலாளர் சேது. கார்த்திகேயன், தடகள பயிற்சியாளர் செந்தில் கணேசன், மற்றும் குத்துச் சண்டை பயிற்சியாளர்கள் பார்த்திபன், அப்துல் காதர் ஆகியோர்  பங்கேற்றனர்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top