Close
செப்டம்பர் 20, 2024 4:01 காலை

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் விளையாட்டுப்போட்டிகள் தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழா

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் விளையாட்டுப்போட்டிகள் தொடங்கியது.

விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவுக்கு கல்லூரியின் தாளாளர் ரெத்தினம் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.இயக்குநர் துரை, துணை இயக்குநர் வெங்கடேஷ், செயலர்  ராஜாராம் முதல்வர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுல கிருஷ்ணன், வம்பன் மருத்துவர் இந்துமதி,  வம்பன் ராஜா. வம்பன் ரமேஷ்  ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை செய்து   மூவர்ணக் கொடியேற்றி ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைத்தனர். பின்னர் போட்டிகள் முறைப்படி தொடங்கியது. இதில், ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து பேராசிரியர் குமாரசாமி  நினைவு  கிரிக்கெட் போட்டியை தொழிலதிபர்  கோவிந்தராஜன் தொடக்கி வைத்தார்.  விளையாட்டு போட்டிகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் செல்வகுமார்  ஒருங்கிணைத்தார். பேராசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top