Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

மாநில குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க செல்லும் புதுக்கோட்டை வீரர்கள்

புதுக்கோட்டை

மாநில அளவிலான போட்டிக்குச்சென்ற புதுக்கோட்டை வீரர்களை வழியனுப்பி வைத்த புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழக நிர்வாகிகள்

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கச் செல்லும் புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை வீரர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் பண்ணை கல்லூரியில் ஜூலை 30 மற்றும் 31 ஆகிய நாள்களில்  நடைபெறும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகளுக்கு செல்லும் வீரர் வீரர்களின் வாழ்த்தி வழி அனுப்பி வைத்த வைக்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை பேருந்து நிலையம்  அருகில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் எஸ்விஎஸ்.ஜெயக்குமார், மாவட்ட குத்துச்சண்டை கழக செயலாளர்  சேது.கார்த்திகேயன், துணைத் தலைவர் மாருதி கண.மோகன்ராஜா, துணைச் செயலாளர் விஆர்எம். தங்கராஜா, குமரகுருபண்ணையார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
இந்த போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், தாஞ்சூர் திருமயம் மற்றும் பெரம்பூர் பகுதியைச் சார்ந்த 60க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களை அனைவரையும் குத்துச்சண்டை பயிற்சியாளர் காதர் வழி நடத்தி செல்கிறார். இந்நிகழ்வில் பொதுமக்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top