Close
செப்டம்பர் 20, 2024 4:11 காலை

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்ற புதுக்கோட்டை மாணவர்

புதுக்கோட்டை

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அன்னவாசல் அரசு பள்ளி மாணவர் ரட்சகன் தங்கம் வென்று சாதனை புரிந்தார்

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அன்னவாசல் அரசு பள்ளி மாணவர் தங்கம் வென்று சர்வதேசப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அன்னவாசல் அரசு பள்ளி மாணவர் தங்கம் வென்று சாதனை புரிந்தார். புதுக்கோட்டைபுதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலை சேர்ந்த  கூலித்தொழிலாறி சின்னையா.

இவரது மகன் ரட்சகன் (15)  அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் குத்துச்சண்டை போட்டியில் ஆர்வம் கொண்ட ரட்சகன் கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 45 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றார்.

பின்னர் கோவாவில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 45 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை புரிந்தார். இதன் மூலம் அக்டோபர் மாதம் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top