Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

அத்திக்கடவு- அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றபடும்: ஈரோட்டில் முதல்வர் உறுதி

ஈரோடு

ஈரோடு பெருந்துறையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்

அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்பும் அத்திக்கடவு அவினாசி திட்டம் இன்னும் சில மாதங்களில் முடிந்துவிடும்  என  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்தார், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் மற்றும் 63,858 நபர்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதன் மொத்த மதிப்பீடு ரூ.612.77 கோடி.

முன்னதாக அவர் பெருந்துறை கிரே நகர் பகுதியில் நடைபெற்று வரும் அத்திக்கடவு- அவிநாசி திட்ட பணிகளை பார்வையிட்டார் பின்னர் விழாவில் அவர் பேசுகையில், ஈரோடு ரிங்ரோடு திட்டத்தை விரிவாக்க ஆய்வு அறிக்கை உருவாக்க ரூ.60 லட்சம் ஒதுக்கப்படும்.

ஈரோடு
ஈரோடு பெருந்துறை அருகே அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

வேளாண் மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் ரூ.16.82 கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும், தாளவாடி நல்லம்பட்டி மற்றும் ஈரோட்டில் வேளாண் பொருட்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் உருவாக்கப்படும்.

மஞ்சள் ஏற்றுமதி முனையம் 10 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப்படும் தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையம் எக்ஸ்ரே வசதியுடன் ரூபாய் 25 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும். மாநிலத்தில் சாதனை படைத்த நெல் உற்பத்தியும், அனைத்து சாதியினரையும் கோவில்களில் அர்ச்சகர்களாக மாற்றும் அரசு சட்டத்தை நிலைநாட்டி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு திமுக அரசின் மாபெரும் சாதனைகள் என அவர் குறிப்பிட்டார்.

அனைத்து மாவட்டங்கள், துறைகள், மக்கள் சமச்சீர் ஆன வளர்ச்சி அடைவது தான் திராவிட மாடல் கொள்கை என்றார். இப்போது, ​​பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற முக்கியத் திட்டங்கள் மற்ற மாநிலங்களால் வரவேற்கப்படுகிறது, பின்பற்றப்படுகிறது.  அதுதான் திராவிட மாதிரி ஆட்சியின் வெற்றி . திமுக ஆட்சிக்கு வந்ததும், சி.என் கல்லூரியை அரசு கல்லூரி ஆக்கியது.

ஈரோட்டில  புதை சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்தியது. ஈரோட்டுக்கு 2 பேருந்து நிலையங்கள் உருவாக்க முடிவு எடுத்தது.  கொடிவேரி குடிநீர் திட்டம் முடிக்கப்பட்டது. மலைப்பகுதிகளில் டெலிமெடிசின் திட்டம் தொடங்கப்பட்டது. மற்றும் ஆட்ரல் ஆப் உருவாக்கப்பட்டது போன்ற எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விழாவில் அமைச்சர்கள் எஸ்.முத்துசாமி, எம்.பி.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி, எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top