Close
செப்டம்பர் 20, 2024 3:49 காலை

பத்திரிகையாளர்கள் நல வாரிய சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படும்

ஈரோடு

திருப்பூர் குமரனின் உருவச்சிலைக்கு மரியாதை செய்த அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

பத்திரிகையாளர் நல வாரிய சலுகைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று செய்தி விளம்பரத்துறை அமைச்சர் எம் பி சுவாமிநாதன் தெரிவித்தார்.

திருப்பூர் குமரன் இல்லத்தில் குமரன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவர்  கூறியதாவது: தமிழக அரசால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் நல வாரியத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வாரியத்தின் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. அதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல்வரின் கவனத்திற்கு அது அனுப்பப்பட்டுள்ளது.  விரைவில் வாரியத்தின் மூலம் பத்திரிகையாளர் நலனுக்கான திட்டங்கள் அறிவிக்கப்படும்.

சென்னிமலை ஒரத்துப்பாளையம் அணையில் இன்னும் சாயக்கழிவுகள் வருகின்றன. எனவே அங்கு நீர் தேக்க முடியவில்லை.  ஏற்கெனவே திருப்பூரில் உள்ள சாயப் பட்டறைகளில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும் சில தனியார் ஆலைகளில் இருந்து சாயக் கழிவுகள் வருகின்றன. அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது சென்னிமலை பகுதியில் அரசு நிலம் குறைவாக உள்ளது. தனியார் இடங்கள் விலை அதிகம். எனவே நெசவாளர்களுக்கு தனியாக வீடு கட்டித் தருவதில் சிக்கல் நீடிக்கிறது என்றார் அமைச்சப் மு.பெ. சாமிநாதன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top