Close
செப்டம்பர் 20, 2024 3:39 காலை

தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

புதுக்கோட்டை

தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற போட்டிகள் வென்ற மாணவருக்கு பரிசளிக்கிறார், ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ்நாடு நாள் விழா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு,  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,  பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் 27 மாணாக்கர்களுக்கு ரூ.1,06,000 மதிப்பிலான பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை  வழங்கினார்.இந்நிகழ்வில், உதவி இயக்குநர் ப.நாகராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top