Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஈரோட்டில் அதிமுகவினர் அஞ்சலி

ஈரோடு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி ஈரோட்டி அவரது உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக நிர்வாகிகள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள  அவரது  உருவச் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  ஆறாம் ஆண்டு நினைவும் நாள்  இன்று (5.12.2022) நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட  அதிமுக அலுவலகத்தில்  உள்ள  ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக  செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன் , கே.எஸ் தென்னரசு ,சிவ சுப்பிரமணியம் , மாவட்ட அவைத்தலைவர் பி.சி.ராமசாமி, முன்னாள் மேயர்  மல்லிகா  பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே. சி. பழனிச்சாமி, முன்னாள் மண்டல தலைவர்கள் கேசவமூர்த்தி, பெரியார்நகர்மனோகரன்.

மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் வீரக்குமார், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் நந்தகோபால், கங்காபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் பொங்கி, வீரப்பன்சத்திரம் எம்ஜிஆர் மன்ற செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு மாலை அணிவித்து  அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் உள்ள ஜெயலிதாவின்  உருவச் சிலைக்கும் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து  2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top