Close
செப்டம்பர் 20, 2024 1:30 காலை

தமிழினி துணைவன் சார்பில் மருத்துவம் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 நாள்கள் பயிற்சி

தமிழினி துணைவன்

தமிழினி துணைவன் குழு சார்பில் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி

தமிழினி துணைவன் சார்பில் மருத்துவம் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 நாள் பயிற்சி வகுப்பு இன்று (டிச.9)  தொடங்குகிறது.

இதுகுறித்து தமிழினி துணைவன் நிறுவனரும் அரசு மருத்துவருமான டாக்டர் வீ.சி.சுபாஷ் காந்தி கூறியதாவது:

புதுக்கோட்டை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள தமிழினி புலன குழுவை சேர்ந்த மருத்துவப் பேராசிரியர்கள்,மூத்த மருத்துவர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் ஒன்றிணைந்து தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்து 7.5 இட ஒதுக்கீட்டில் தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் மாணவ மாணவிக ளுக்கு மருத்துவ கல்வியை சிரமமின்றி அவர்கள் படிப்பதற்கு கட்டணம் இல்லாமல் தமிழினி துணைவன் என்ற வாட்ஸ்அப் குழு   உருவாக்கப்பட்டது.

தமிழகம் முழுவதுமுள்ள மாணவ மாணவிகளுக்கு திங்கள், செவ்வாய் ,புதன் ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை அவர்களுக்கு முதலாமாண்டு மருத்துவ பாடத்தின் கருப்பொருளை பேராசிரியர்கள் ,மூத்த மருத்துவர்கள் கொண்டு தொடர்ந்து வகுப்புகள் நடத்தி வருகிறோம்.

இதுவரை முதலாம் ஆண்டு மருத்துவ பாடங்களான உடற்கூறு இயல், உடலியங்கியல் மற்றும் உயிர் வேதியியல் குறித்து இணையவழி வகுப்புகள் மூலம் தமிழில் விளக்கிக் கூறி தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாரமொரு பிரபல மருத்துவ நிபுணர் கலந்து கொள்ளும் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வகுப்பு, மாதம் ஒருமுறை மனநல ஆலோசனை வகுப்புகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

இதற்கென பிரத்யேகமாக வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதிலும் மாணவ மாணவிகளுக்கு எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.  தமிழினி துணைவன் வாட்ஸ் அப் குழுவில்  இதுவரை 400 க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் இணைந்து ள்ளனர்.

இதை அடுத்து, இந்த  ஆண்டில்  தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் 2022 -2023 கல்வி ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் 491 மாணவ மாணவிகளுக்கு வாரந்தோறும்  வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் மாலை 6 முதல் 7 மணி வரை வகுப்புகள் நடைபெறுகிறது.

அந்த வகையில்,  டிச.9, 10, 11 ஆகிய  3 நாள்கள் வகுப்புகள் நடத்தப்படுகிறது  என்றார் தமிழினி துணைவன் குழுவின் இணைய நிறுவனர் டாக்டர். வீ.சி.சுபாஷ் காந்தி( 98949 80802 ).

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top