Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

வெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மகாகவிபாரதியாரின் 140 -ஆவது பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை

புதுகை திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பாரதி விழா

மகாகவி பாரதியாரின் 140 -ஆவது பிறந்த நாளை பாடல் பாடி,கவிதை வாசித்து கொண்டாடிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் விழாவில் பாரதியாரின் படத்திற்கு பள்ளிமா ணவர்கள் பாரதியின் புத்தகத்தை கையில் ஏந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் பள்ளி மாணவி கே.கே. தர்ஷனா பாரதியாரின் பாடல்களை பாடினார். தேச விடுதலைக்காகவும் பெண் விடுதலைக்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் பாடல்களை,  கவிதைகளை, கட்டுரைகளை எழுதி விழிப்புணர்வூட்டிய மகாகவி பாரதியின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் பாரதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.

புதுக்கோட்டை
பாரதி உருவப்படத்து மரியாதை செய்த மாணவர்கள்

இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கலந்துகொண்டு பாரதியார் பற்றிய செய்திகளை பகிர்ந்துக் கொண்டார்.  மேலும் துணை முதல்வர் குமாரவேல் உள்ளிட்ட ஏராளமான பள்ளி ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும்  மலர் தூவி மரியாதை செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top