Close
செப்டம்பர் 20, 2024 4:10 காலை

இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் புதிய குழாயில் குடிநீர் விநியோகம்: எம்எல்ஏ சின்னதுரை தொடக்கம்

புதுக்கோட்டை

இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் புதிய குழாயில்குடிநீர் விநியோகத்தை எம்எல்ஏ சின்னதுரை தொடக்கி  வைத்தார்.

புதுக்கோட்டையை அடுத்த இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் புதிய குழாயில் குடிநீர் வினியோகத்தை கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை   மக்கள் பயன்பாட்டிற்காக தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முட்டுக் காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்க்குழாயில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தை கேள்விப்பட்ட அடுத்த அரைமணி நேரத்தில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தினார்.

மாற்று ஏற்பாடாக சிறுமின்விசைத் தொட்டி மூலம் அந்த மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். இந்நிலையில், புதிய குடிநீர்க் குழாய்மூலம் வேங்கைவயல் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. புதிய குழாய்மூலம் வழங்கப்பட்ட குடிநீரை சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைச்சாமி, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் டி.சலோமி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் அ.மணவாளன், ஊராட்சி மன்றத் தலைவர் பத்மா முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top