Close
செப்டம்பர் 20, 2024 1:34 காலை

சர்வதேச யோகாசனப் போட்டி: ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலை பள்ளி மாணவர் முதலிடம்

புதுக்கோட்டை

புதுச்சேரியில் நடந்த சர்வதேச யோகாசனப் போட்டியில் முதல் பரிசு வென்ற புதுகை வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பா. சஞ்சீத்பாபு

28 -வது சர்வதேச யோகாசனப் போட்டியில் புதுக்கோட்டை
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர் முதலிடம் வென்று சாதனை படைத்தார்.

புதுச்சேரியில்  புதுச்சேரி அரசுசுற்றுலாத் துறை சார்பாக ஆண்டு தோறும் நடத்தப்படும் சர்வதேச யோகா திருவிழாவில் ஒரு பகுதியாக 28-ஆவது சர்வதேச யோகாசனப் போட்டி நடைபெற்றது.

இதில் 9 முதல் 14 வயதிற்குட்டபட்டபிரிவில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவன் பா. சஞ்சீத்பாபு, ஆண்கள் பிரிவுக்கான போட்டியில் முதல் பரிசை வென்றார்.

வெற்றிபெற்றதற்கான பரிசினை புதுச்சேரி முதலமைச்சர்  ரெங்கசாமி  வழங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் லெட்சுமணன் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த யோகா வல்லுநர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவனைபள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி ,யோகா பயிற்றுனர் யோகாபாண்டியன், துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் கௌரி, ஆத்மா யோகா மைய செயலாளர் யோகாபுவனேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top