Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

தமுஎகச சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

புதுக்கோட்டை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மரபுக்கலை கிளை சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மரபுக்கலை கிளை சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு  புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராசி.பன்னீர்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை
திருவள்ளுவர் தினம்
இந்நிகழ்வில், மருத்துவர் எஸ்.ராமதாஸ், பேராசிரியர் விஸ்வநாதன், உலக திருக்குறள் பேரவை செயலர் ராமுக்கண்ணு, மருத்துவர் கே.ஹெச்.சலீம், திருக்குறள் கழகத் தலைவர் கே. ராமையா, தமுஎகச மாவட்ட துணைச் செயலாளர் சு.பீர்முகம்மது.
மாவட்ட குழு உறுப்பினர்கள் புதுகை பாண்டியன், புதுகை புதல்வன் . மரபுக் கலை கிளைச் செயலாளர் அக்குஹீலர், கி.இளஞ்சூரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், மாணவர்களின் சிலம்பம், களரி போன்ற கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top