Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

சிவகங்கை அருகே மஞ்சு விரட்டு போட்டி.. அமைச்சர் தொடக்கி வைப்பு

சிவகங்கை

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியை தொடக்கி வைத்த அமைச்சர் பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில், பொங்கல் விழாவை  முன்னிட்டு, நடைபெற்ற மஞ்சுவிரட்டு  நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசுகையில்,
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவைகள் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு, அனைத்துக் கிராமப்புறப் பகுதிகளிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

அதில், குறிப்பாக, வரலாற்று சிறப்பு மிக்க நமது சிவகங்கை மாவட்டத்தில், பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் தமிழர் திருநாள் பொங்கல் விழாவினை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதில், கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் புகழ் பெற்ற ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை எவ்வித இடையூறுன்றி சிறப்பாக தமிழகத்தில் நடத்திட, தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில், கண்டுப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி  நடைபெறுகிறது.  இவ்விழாவில் பங்கேற்பதற்கென அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, பல்வேறுப் பகுதிகளிலிருந்து 141 காளைகளும், 75 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

இவ்விழாவினை, ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வரும் கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பு குழுவினைச் சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இவ்விழாவில் பங்கு பெற்றுள்ளவர்கள் அரசால் வகுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி, பாதுகாப்புடனும் இருந்து விழாவை சிறப்பாக நடத்திடுவதற்கு ஒவவொருவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்தார்.

முன்னதாக, கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு விழாவினை முன்னிட்டு, மாடுபிடி வீரர்கள், கூட்டுறவுத்துறை அமைச்சர், முன்னிலையில், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top