Close
செப்டம்பர் 20, 2024 3:49 காலை

திருவொற்றியூரில் ரூ.8 லட்சத்தில் அமைத்த சிறுவர் பூங்கா திறப்பு

சென்னை

சென்னை திருவொற்றியூரில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்தை திமுக எம்பி கலாநிதி வீராசாமி

சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் வடக்கு மாட வீதியில் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திங்கட்கிழமை வட சென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார்.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை கோயில் திருக்குளம் அருகே வடக்கு மாட வீதியில் குப்பைகள் கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசிய நிலையில் இதனை சீரமைத்து பொதுமக்கள் சிறுவர்கள் பயன்படுத்தும் வகையில் பூங்கா அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் செலவில் தனியார் பங்களிப்புடன் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவர்கள் விளையாடுவதற்கான சுழல் நாற்காலி, ஊஞ்சல் போன்ற விளையாட்டு சாதனங்கள்   அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை  வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி  பொதுமக்கள், சிறுவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, திமுக நிர்வாகிகள் குறிஞ்சி கணேசன், ஆர்.சி. ஆசைதம்பி, ஆர். எஸ்.சம்பத், தமிழ்ச்செல்வன், எம்.வி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top