Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

புதுக்கோட்டை மாவட்ட காவல் நிலையங்களில் காவல்துறை டிஜிபி ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர், நமணசமுத்திரம் போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக காரில் ராமநாதபுரத்திற்கு சென்றார்.

அப்போது  திருச்சி- புதுக்கோட்டை சாலையில்   உள்ள  மாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். இவருக்கு  மாத்தூர் போலீஸார்   வரவேற்றனர். இதை தொடர்ந்து மாத்தூர் போலீஸ் நிலையத்தின் உள் மற்றும் வெளிப்பகுதி வளாகம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் வழக்கு தொடர்பான பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து மாத்தூர் போலீஸ் நிலையத்தை சிறப்பான முறையில் தூய்மையாக பராமரித்து வருவதற்கும், வளாகத் தில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதையும் பாராட்டி மாத்தூர் காவல்நிலைய ஆய்வாளர்  கோபாலகிருஷ் ணன்,  உதவி ஆய்வாளர்  செவ்வந்தி உள்ளிட்ட போலீசாருக்கு ரூ.5 ஆயிரம்  ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.

15 நிமிட ஆய்வுக்குப் பிறகு  மாத்தூர் காவல் நிலையத்தி லிருந்து  புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை
நமனசமுத்திரம் காவல் நிலையத்தில் காவலர்களுக்கு பரிசளித்த டிஜிபி சைலேந்திரபாபு

பின்னர் போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் வழக்கு தொடர்பான பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர் நமணசமுத்திரம் ஆய்வாளர்  உள்ளிட்ட போலீசாரை பாராட்டி ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கினார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் டிஜிபி. சைலேந்திரபாபு அங்கிருந்து காரைக்குடிக்கு  புறப்பட்டு சென்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top