Close
செப்டம்பர் 20, 2024 3:37 காலை

புதுக்கோட்டை அருகே வடகாட்டில் கவிதை நூல் அறிமுக விழா

புதுக்கோட்டை

வடகாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கவிதை நூல் அறிமுக விழா

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், கவிஞர் புத்திரசிகாமணி எழுதிய புவியீர்ப்பு விசையை எதிர்த்து எனும் கவிதை  நூல் அறிமுக விழா  நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத்தின் கிளைத் தலைவர் எஸ்.டி.பஷீர்அலி தலைமை வகித்தார். கவிஞர்கள் வெள்ளைசாமி, ரமா ராமநாதன், சிவானந்தம் ஆகியோர் கவிதை நூல் குறித்துப் பேசினர்.

தங்களது உரையில், புத்தகங்கள் யாவும் தொட்டுப் பார்த்தால் காகிதமாகத் தெரியும். ஆனால், தொடர்ந்து வாசித்தால் அதுவே பேராயுதமாகத் தெரியும். பணம், சொத்துகள் செய்ய முடியாததை தன்னம்பிக்கை செய்யும் .அதை கொடுக்கக் கூடியவை புத்தகங்கள்தான். 100 பொதுக் கூட்டங்களில் பேசக்கூடியவற்றைக் கூட ஒரு புத்தகம் சொல்லிவிடும் என குறிப்பிட்டனர்.
பாடகர் தமிழரசன் பாடல் பாடினார். முன்னதாக கிளையின் செயலாளர் மு.ராஜா வரவேற்றார். நிர்வாகி பாரதி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top