Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் யோகாசன ஆசிரியர் நியமிக்க கோரிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் யோகாசனம் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் காசிநாததுரை செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் யோகா ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். அதேபோல மருத்துவத்துறைகளிலும் காவல் துறைகளிலும் சுகாதாரத் துறைகளிலும் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

அதுபோல மருத்துவத் துறைகளிலும் காவல் துறைகளும் சுகாதார துறையிலும் விளையாட்டு துறையிலும் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதேபோன்று அனைத்து விளையாட்டு துறைகளிலும் யோகா பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும்.

ஜூன் 21 -ஆம் தேதி அன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு யோக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி  தமிழகத்தில் உள்ள அனைத்து யோகா ஆசிரியர்களும் ஒன்றிணைந்து வருகின்ற ஜூன் 20-ஆம் தேதி அன்று திமுக அரசின் முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரி வளாகத்தில் மாநில பொதுச் செயலாளர் காசிநாததுரை தலைமையில் நடைபெற்றத ஆலோசனை கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் அரசு கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் விளையாட்டு துறையிலும் யோகா பயிற்சிகளை இந்த கல்வி ஆண்டிலேயே நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top