Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் குடிநீர் உபகரணங்கள் அளிப்பு

திருமயம்

லெணாவிலக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு குடிநீர் குழாய்கள் வழங்கிய ரஜினி ரசிகர் மன்றத்தினர்

புதுக்கோட்டை ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 50 ஆயிரம் மதிப்பிலான குடிநீருக்கான பைப் உபகரணங்கள் புதுக்கோட்டை லெணாவிலக்கு  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்வாசிகளுக்கு  வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை லெணா விளக்கு அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின் றனர்.  இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக குடிநீர் பைப் உபகரணங்கள் வேண்டுமென்று ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் மாவட்ட செயலாளர் கே.கே. முருகுபாண்டியிடம் கோரிக்கை மனு வழங்கி உள்ளனர்.

இதனை அடுத்து அப்பகுதி இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள மக்களுக்கு தேவையான 50 ஆயிரம்  ரூபாய் மதிப்பிலான குடிநீர் பைப் உபகரணங்கள் மாவட்ட செயலா ளர் கே.கே. முருகுபாண்டியன் ஏற்பாட்டில், நகர செயலாளர் தேவகுமார் முன்னிலையில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களிடம் வழங்கினர். இந்நிகழ்வில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top