Close
செப்டம்பர் 20, 2024 1:24 காலை

புதுக்கோட்டை அருகே குப்பையன் பட்டியில் ஜல்லிக்கட்டு: 45 பேர் காயம்

புதுக்கோட்டை

புதுகை அருகே குப்பைக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை அருகே குப்பையன்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 45  பேர்  காயமடைந்தனர்.

 புதுக்கோட்டை அருகே குப்பையன்பட்டியில் இச்சடி முனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது .

ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 645 காளைகளும் அதே போன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் காளை மாடுகள் மற்றும் மாடு பிடி வீரர்களை மருத்துவ பரிசோதனைக்கு பின்னே களத்தில் இறங்க  அனுமதிக்கப்பட்டனர்.

போட்டி தொடங்குவதற்கு முன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்  முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி ஏற்றுக்கொண்டனர். பின்னர் கொடியசைத்து ஜல்லிக்கடு போட்டியை  தொடக்கி வைத்தார்.

இதையடுத்து, வாடிவாசலில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை அடக்கினர்.  இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் போக்கு காட்டியது.

இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசுகள் மற்றும் சில்வர் அண்டா, டேபிள், குக்கர், மிக்ஸி, டேபிள் பேன் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 45 பேர் காயமடைந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மருத்துவத்துறை  மற்றும் வருவாய்த் துறையினர், காவல் துறையினர் கண்காணிப்பில் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top