Close
செப்டம்பர் 20, 2024 6:38 காலை

ராணிரமாதேவி மறைவு… இறுதிச்சடங்கில் திரளானோர் பங்கேற்று அஞ்சலி

புதுக்கோட்டை

ராணிரமாதேவி தொண்டைமானுக்கு அஞ்சலி செலுத்திய ஆட்சியர் கவிதாராமு.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான். இவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் தொண்டைமானின் மனைவி ராணி ரமாதேவி ( 84). இவர் புதுக்கோட்டை அருகே இச்சடியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக திருச்சியில் தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு 12.4.2023  -ஆம் தேதி பிற்பகலில் ராணி ரமாதேவி காலமானார். இதையடுத்து, அவரது உடல் இச்சடியில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.அவரது உடலுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு இறுதி சடங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.  ராணி ரமாதேவியின் மூத்த மகனான ராஜா ராஜகோபால தொண்டைமான் மற்றும் அவரது மனைவி திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரான சாருபாலா தொண்டைமான், 2-வது மகனான விஜயக்குமார் தொண்டைமான்,

மகள் ராஜ்குமாரி ஜானகி மனோஹரி மற்றும் பேரக்குழந்தைகள் யுவராஜா பிருத்விராஜ் தொண்டைமான்,  ராஜ்குமாரி ராதா நிரஞ்சனி, சாஸ்வத் சிக்கிவாகனன் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மலர்வளையம், மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின் ராணி ரமாதேவியின் உடல் அவரது இல்ல வளாகத்திலேயே தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு 2-வது மகனான விஜயகுமார் தொண்டைமான் எரியூட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top