Close
செப்டம்பர் 20, 2024 3:58 காலை

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து போராட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திலகர் திடலில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்

ஓய்வூதியர், ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாததை கண்டித்து புதுக்கோட்டை திலகர் திடலில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலுவையின்றி அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். குடும்ப நல நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கான முழு செலவையும் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கிட வேண்டும்.

ஓய்வூதியர், ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை திலகர் திடலில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி  முழக்கங்கள் எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top