Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

தமிழக பண்பாட்டுக் கழகம் சார்பில்  ஆசிரியர்கள், கலைஞர்களுக்கு விருது

திருச்சி

தமிழக பண்பாட்டுக் கழகம் சார்பில் ஆசிரியர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழக பண்பாட்டுக் கழகம் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

திருச்சியில் தமிழக பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் 27 -ஆம் ஆண்டு விழாவில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் மற்றும் சிறந்த கல்விச் சேவை புரிந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா தேவர் ஹாலில் நடைபெற்றது.

தமிழக பண்பாட்டுக் கழக நிறுவனர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்திராக  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு புதுக்கோட்டை மேலப்பட்டி நடுநிலைப்பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியர் மகேஸ்வரன் ,டி இ எஸ் சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கிறிஸ்டி ஜோதி,  உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சிறந்த  கலைஞர்களுக்கு      விருதுகளை வழங்கி பாராட்டினார் .

திருச்சி
தமிழக பண்பாட்டுக் கழகம் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது விழா பங்கேற்றவர்கள்

தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும்  சென்னை உணவகசங்க தலைவர் ஆர்ஆர் .தமிழ் செல்வன் மற்றும் விஜய் டிவி புகழ் ரவீந்திரன் கம்பம் மீனா, சன் டிவி புகழ்  தீபா, சங்கீதா ,சன் டிவி எதிர்நீச்சல் புகழ் காயத்ரி கிருஷ்ணா, ஜி டிவி யமுனா போன்ற சின்னத்திரை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம்   நடைபெற்றது.  விருதுகள் பெற்ற கலைஞர்கள் மற்றும் ஆசிரியர்களை கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top