Close
செப்டம்பர் 19, 2024 11:23 மணி

புதுக்கோட்டையில் ஆய்வு செய்ய உதயநிதிஸ்டாலின் நாளை வருகை

புதுக்கோட்டை

மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் புதுக்கோட்டைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தொடர்பான முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25.05.2023 வருகை தொடர்பான முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25.05.2023 அன்று வருகை தொடர்பான முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 25.05.2023 அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகை தருவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, அனைத்துத்துறைகளின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

முன்னேற்பாடு பணியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா கலந்தாய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top