Close
செப்டம்பர் 20, 2024 1:25 காலை

மாவட்டத்தின் சிறந்த இளைஞர் நற்பணி மன்றத்துக்கு விருது: எம்பி திருநாவுக்கரசர் வழங்கல்

புதுக்கோட்டை

மாவட்டத்தின் சிறந்த இளைஞர் நற்பணி மன்றமாக தேர்வு செய்யப்பட்ட பாலன் நகர் இளைஞர் நற்பணி மன்றத்துக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை நேரு யுவகேந்திராவின் சார்பில் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா உடன் இணைந்து செயல்படும் இளைஞர் மன்றங்களில் சிறந்த சேவை புரிந்த இளைஞர் மன்றத்தை சேவையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து மாவட்ட அளவிலான சிறந்த இளையோர் மன்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சித் தலைவர்  தலைமையிலான தேர்வு குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்திற்கு நேரு யுவகேந்திரா சார்பில் ரூ.25,000 ரொக்க பரிசுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ந்த வகையில் கடந்த ஆண்டில் மாவட்டத்தின் சிறந்த இளைஞர் நற்பணி மன்றமாக பாலன் நகர் இளைஞர் நற்பணி மன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அதற்கான பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை நேரு யுவகேந்திராவின் சார்பில் திருச்சிராப்பள்ளி பாராளு மன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர்  வழங்கினார்.

நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர்  ஜோயல் பிரபாகர், திட்ட உதவி அலுவலர்  நமச்சிவாயம், முருகேசன்,  பழனியப்பன்,  ஜி. எஸ். தனபதி, பாலன் நகர் ரங்கசாமி, பாஸ்கர் சீனிவாசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பாலன் நகர் இளைஞர் நற்பணி மன்றம் மாவட்டத்தின் சிறந்த இளைஞர் மன்றத்திற்கான இவ்விருதை மூன்றாவது முறையாக பெறுகிறது  என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top