Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம்

தஞ்சாவூர்

தஞ்சையில் ஜூன் 1 ல் மக்கள் நேர்காணல் முகாம்

தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் ஜூன் 1 -ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும்
பொருட்டு 1969 -ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ”மக்கள் நேர்காணல் முகாம்”என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 2-ஆவது புதன்கிழமை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ” மக்கள் நேர்காணல் முகாம்”  தொடர்ந்து நடத்திட அரசாணை (நிலை) எண். 378 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை,வருவாய் நிருவாகம் பிரிவு வரு.தனி .3(2) பிரிவு, நாள். 22.08.2022 -இன் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, எதிர்வரும்  01.06.2023 (வியாழக்கிழமை)
அன்று கும்பகோணம் வட்டம், நாச்சியார்கோயில் சரகம், நாச்சியார்கோயில் கிராமத்தில் ”மக்கள் நேர்காணல் முகாம்” நடத்திட தஞ்சாவூர், மாவட்ட ஆட்சியரால் உத்தரவிடப் பட்டுள்ளது.

மேற்படி ”மக்கள் நேர்காணல் முகாம்” பொதுமக்கள் பெருமளவில்கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வுபெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top