Close
செப்டம்பர் 19, 2024 6:51 மணி

தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம்… அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆலோசனை

தஞ்சாவூர்

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைத்தல் தொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் அரசுதலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  தலைமையில்  (22.06.2023) ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் தமிழ் வளர்ச்சிமற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவுக்கிணங்க சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கையின் போது உலகை ஆண்ட சோழர்களின் பங்களிப்பை போற்றவும் அக்கால கலைப் பொருட்கள் நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும் தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக் கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக தஞ்சாவூர் பெரியகோயில் அருகேயுள்ள மேம்பாலம் அருகில் உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே தேர்வு செய்து, துறைச் செயலர் உள்ளிட்டஅலுவலர்களிடம் காண்பித்துள் ளார்.  இந்த இடம் ஏற்புடையதாக உள்ளது என துறைச் செயலர் கூறியதன் அடிப்படையில் ஆய்வுசெய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாநகரில் இவ்வளவுபெரிய இடம் கிடைத்திருப்பது அரியவாய்ப்பாக இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் எண்ணம் வீண் போகாத வகையில் சிறந்த அருங்காட்சி யகத்துக்கு இந்த இடம் ஏற்புடையதாக உள்ளது.

மேலும், இந்த இடத்துக்கு வருவதற்கான வழிகள் குறித்து விரிவான ஆய்வுசெய்தபிறகு இறுதிமுடிவு எடுக்கப்படும். ஏறத்தாழ 12 ஏக்கர் பரப்பளவிலுள்ள இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான 5 ஏக்கர் இடம் கிடைக்கும் சூழல் இருக்கிறது.

இதை மேலும் ஆய்வுசெய்து, முடிவுஎடுக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு சென்று அருங்காட்சி யகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  தெரிவித்தார்.

இதில் சட்டமன்றஉறுப்பினர்கள் துரைசந்திரசேகரன்  (திருவையாறு), டி. கே. ஜி. நீலமேகம்  (தஞ்சாவூர்), கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா , தஞ்சாவூர் மாநகராட்சி மேயர்  சண் .ராமநாதன் , மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி , தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் கே. நெல்சன், மாவட்ட  சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் எஸ். முத்துக்குமார், தஞ்சாவூர் அரசு அருங்காட்சியம் காப்பாட்சியர்  சி.சிவகுமார் (பொ) மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top