Close
செப்டம்பர் 20, 2024 12:36 காலை

மஞ்சுவிரட்டில் மாடு முட்டி உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு சக காவலர்கள் நிதியுதவி

புதுக்கோட்டை

மஞ்சுவிரட்டு காளை முட்டி மறைந்த மீமிசல் காவலர் து.நவநீதகிருஷ்ணன் மனைவி ந.சபரி என்பவருக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், காவல் அமைச்சு பணியாளர்களால் தாமாக முன்வந்து வழங்கிய உதவித்தொகை ரூ.8.40 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய எஸ்பி. வந்திதா பாண்டே

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி உட்கோட்டம், கே.புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூர் கிராமத்தில் கடந்த 03.05.2023-ம் தேதி நடைபெற்ற மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக மஞ்சுவிரட்டு காளை முட்டி  மீமிசல் காவல் நிலைய காவலர்( 870) து.நவநீதகிருஷ்ணன் உயிரிழந்தார்.

அவரது மனைவி ந.சபரி என்பவருக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவல் அமைச்சு பணியாளர்களால் தாமாக முன்வந்து வழங்கிய உதவித்தொகை ரூ.8,40,000/- (ரூபாய் எட்டு லட்சத்து நாற்பதாயிரம் மட்டும்)  20.06.2023-ல் தேதி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே  வழங்கினார்.

மேலும், மஞ்சுவிரட்டு நிகழ்வில் காளை முட்டி இறந்து போன நவநீதகிருஷ்ணனிண் மனைவி சபரி என்பவரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவர் பணிபுரிய விருப்பம் தெரிவித்த இடத்திற்கே பணியிட மாறுதல் ஆணையையும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top