Close
செப்டம்பர் 19, 2024 11:19 மணி

வாசிப்போர் மன்றம் மாணவர்களுக்குப் புதியசிறகுகளைத் தரும்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற வாசிப்போர் மன்ற தொடக்க விழாவில் பேசிய அறிவியல் இயக்க மாநிலச்செயலர் பாலகிருஷ்ணன்.

வாசிப்போர் மன்றம் மாணவர்களுக்குப் புதியசிறகுகளைத் தரும் என்றார் தமிழ்நாடுஅறிவியல் இயக்க மாநிலசெயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன்.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் வாசிப்போர் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. மேனாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அவர்களின் ஆலோசனைப்படி தமிழகத்திலேயே முதன்முதலாக மாணவர்களே ஒன்றுகூடி  இந்த வாசிப்போர் மன்றத்தை  தொடங்கியுள்ளனர்.

விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். சிறப்புவிருந்தினராக தமிழ்நாடு அறிவியல்  இயக்க மாநில செயலாளர் மற்றும் துளிர்மாத இதழின் ஆசிரியர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு மன்றத்தைத் தொடக்கி வைத்து பேசியதாவது:

முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களால் இன்றைக்கு தமிழகமெங்கும் தொடங்கவேண்டும் எனஆலோசனை வழங்கப்பட்டதன் அடிப்படையில் வாசிப்போர் மன்றம் என்ற சிந்தனைக்கு பலஆண்டுகளுக்கு முன்பேசெயல் வடிவம் கொடுத்தவர் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி.

நோ புக்டே” எனும் புத்தகமில்லாதினம் கொண்டாடி பாடப்புத்தங்களைத் தாண்டிபல்வேறு நூல்களை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்திய பள்ளி இன்று தமிழகத்திலேயே முதன் முதலாக “வாசிப்போர் மன்றம்” தொடங்கிய பள்ளி என்ற பெருமைகொள்கிறது.

இன்றைக்கு நூல்களை மதிப்புரை செய்த மாணவர்கள் மிகச் சிறப்பாக பேசினார்கள். தொடந்து எல்லா மாணவர்களும் நூல்களை வாசிப்பதிலும், படித்ததில் பிடித்ததை விவாதிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

வாசிப்போர் மன்றத்தின் தலைவராக அ.அ.அட்சயா, துணைத்தலைவராக உ. உதயரிஷ்னியா, செயலாளர் மா. ஸ்ரீவர்சன், துணைச் செயலாளர்களாக மா.ரோகித்,  ச. தாரிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை
வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் நடைபெற்ற வாசிப்போர் மன்ற தொடக்க விழாவில் பங்கேற்ற சான்றோர்கள்

நிகழ்வில் “இப்படிக்கு மரம்”என்ற நூலைப் பற்றி மா.ஸ்ரீவர்சன்,“மூன்றாம் உலகப்போர்”எனும் தலைப்பில் மா. ரோகித், கவிஞர் தங்கம் மூர்த்திகவிதைகள் எனும் நூல்பற்றி அ.அ.அட்சயா ஸ்ரீ, உங்களோடு மூன்றுநிமிடங்கள்”என்ற தலைப்பில் உ. உதயரிஷ்னியா,“இறையன்பு தகவல் களஞ்சியம்” பற்றி ஷீபா,“கனவுகள்”,எனும் கதைகள் தாரிகா,“ மந்திரகிலுகிலுப்பை”என்னும் கதைகள் சர்விகா, கணிணிமுல்லா கதைகள் என்ற நகைச்சுவை கதைகள் கா.லோகித் ஆகிய மாணவர்கள் குறுகிய காலத்தில் பள்ளி நூலகத்திலிருந்து நூல்களைப் பெற்றுவாசித்துமதிப்புரை வழங்கினார்கள்.

விழாவில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், வழக்கறிஞர் செந்தில்குமார், கல்வித்துறை கணேஷ், மகாத்மாரவிச்சந்திரன்,பேராசிரியர் கருப்பையா, ஒருங்கிணைப்பாளர் கௌரி,காசாவயல் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு புதிதாகப் பொறுப்பேற்ற வாசிப்போர் மன்ற நிர்வாகிகளை வாழ்த்தினர்.

முன்னதாக ஒருங்கிணைப்பாளர் கோமதிபிள்ளை வரவேற்றார். நிறைவாக தமிழாசிரியர் கணியன் செல்வராஜ் நன்றி கூறினார். நிகழ்வை ஆசிரியர் உதயகுமார் தொகுத்து வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top