Close
செப்டம்பர் 20, 2024 1:23 காலை

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறன் உடையோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய சுயம்வரம்

ஈரோடு

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கலந்து கொண்டு வெள்ளி விழா சின்னத்தை வெளியிட்டார்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின்(சென்னை) கூட்டமைப்பு மற்றும்  சென்னை  ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம்,
இணைந்து நடத்திய 11-ஆம் ஆண்டு சுயம்வரம் நிகழ்ச்சி
அந்தியூர் ஸ்ரீ வாரி மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்  கலந்து கொண்டு இறுதியாக தேர்வான 8 ஜோடிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி கூட்டமைப் பின் வெள்ளி விழா சின்னத்தை வெளியிட்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நல சங்கத்தின் செயலாளர்செந்தில் குமார், பொருளாளர் ஆ.நவநீதகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஏ.வி.பாலகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகி கள்,பொறுப்பாளர்கள், கிளை அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள், பார்வையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top