Close
செப்டம்பர் 19, 2024 11:03 மணி

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் நடந்த உணவு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி  முகாம்  நடைபெற்றது.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கானஉணவு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

விழாவில் கோயமுத்தூர் பாம்பினோ பாஸ்தாபுட்  நிறுவனத்தின் மண்டல மேலாளர் விவேகானந்தன் கலந்து கொண்டு மாணவர்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள், தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் பற்றி விரிவாக  எடுத்துரைத்தார்.

அவர் பேசும்போது, குழந்தைகள் நூடுஸ் போன்ற துரித உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்களே அவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று பெற்றோர்கள் கேட்கிறராகள். நூடுல்ஸ் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா வராதா என ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் குழந்தைகளுக்கு நூடுஸ்சை சமைத்துக் கொடுக்காமல் தவிர்த்தாலே அவர்கள் மாற்று உணவிற்கு பழகிக் கொள்வார்கள்.

பொதுவாகவே மைதா இல்லாத உணவை வெகு சீக்கிரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டிய சூழல் உருவாகியு ள்ளது. அரிசி மற்றும் கோதுமையில் செய்யப்பட்ட உணவுகள் இரண்டு மணிநேரத்தில் செரிமானமாகிவிடுகின்றன. ஆனால் மைதாவினால் தயாரிக்கப்பட்ட புரோட்டா செரிமான மாவதற்கு நாற்பத்தெட்டு மணிநேரம் வரைக்கும் ஆகிறது.

நாம் சாப்பிடுகின்ற உணவுகள் எவ்வளவு விரைவாக செரிக்கின்றதோ அவ்வளவுக்கு உடல் ஆரோக்கியம் பெறும். வாரம் இரண்டு முறை உணவில் கீரை சேர்த்துக் கொண்டால் பெண்களுக்கு இரும்புச் சத்து தொடர்ந்து கிடைத்து உடல் பலமாகும்.

ஆகவே எளிதில் செரிமானமாகக் கூடிய சேமியா, பாஸ்தா, ரவை உப்புமா மற்றும் சிறுதாணிய உணவுகளை குழந்தை களுக்கு தாய்மார்கள் சமைத்துக் கொடுக் கவேண்டும். மாணவர்கள் தேர்வுக் காலங்களில் கண் விழித்து அதிக நேரம் படிக்க வேண்டியிருப்பதால், உடல் சோர்வை தவிர்த்திட சத்தான உணவுகளை மட்டுமே சமைத்துக் கொடுத்து குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

பின்னர் பெற்றோர்களின் கேள்விகளுக்குவிளக்கமளித்தார். நிகழ்வில் கலந்துகொண்ட பெற்றோர்களுக்கு பாம்பினோ பாஸ்தா நிறுவனஉணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை
பயிற்சி முகாமில் பங்கேற்ற முதல்வர் தங்கம்மூர்த்தி உள்ளிட்டோர்

இந்தநிகழ்வில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பளர் கௌரி,மேலாளர் ராஜா,ஆசிரியர்கள் உதயகுமார், கணியன்செல்வராஜ், காசாவயல் கண்ணன், ராமன், உடற் கல்வி ஆசிரியர்கள் நீலகண்டன், விசாலி, தஞ்சாவூர் தொழிலதிபர் செல்வம், பாம்பினோபாஸ்தா நிறுவனத்தைச் சார்ந்தமணிசேகரன்,ஆனந்த்,பிரதீப் மற்றும் ஏராளமான பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான உணவு முறைகள் பற்றிய இந்த விழிப்புணர்வு பயிற்சி  முகாம்  மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக பெற்றோர்கள்  பாராட்டு தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top